Also Watch
Read this
By: Manigandan Raja

இந்தியா,பாகிஸ்தான்,இலங்கை அணிகள் அதிருப்தி
ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான கிரிக்கெட் மைதானம், உடை மாற்றும் அறை உள்ளிட்டவை முறையாக பராமரிக்கப்படவில்லை என்றும், இதன் காரணமாக இந்தியா,பாகிஸ்தான்,இலங்கை, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகள் அதிருப்தியில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உடல் தகுதி திறனை வெளிப்படுத்திய இந்திய வீரர்கள்
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிசிசிஐ கட்டுப்பாட்டில் உள்ள உடற்தகுதி தேர்வு மையத்தில் நடைபெற்ற உடற்தகுதி பயிற்சியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்று தங்களது திறனை வெளிப்படுத்தினர்.

ஐசிசி போட்டிகளில் வீரர்கள் தொடர்ந்து இடம்பெற இந்த மையத்தின் சான்று அவசியமாக்கப்பட்டுள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், கெய்க்வாட், பந்த் உள்ளிட்ட வீரர்கள் தேர்வில் பங்கேற்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved