Also Watch
Read this
By: Manigandan Raja

ஈரானிய எண்ணெய் கப்பல் மீதான தாக்குதல்
ஈரானிய எண்ணெய் கப்பல் மீதான தாக்குதல் காணொளியை அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ளது. அமெரிக்க ராணுவ வீரர்களின் துல்லியமான தாக்குதலுக்கு நன்றி தெரிவித்ததோடு, அமெரிக்க தாக்குதலால் கைலோ கப்பல் ஓமன் வளைகுடாவில் மூழ்கி, கடலின் அடிப்பகுதியில் உள்ள ஈரானிய கடற்படையுடன் இணைந்ததாக ராணுவம் கூறியுள்ளது.
சீற்றத்துடன் குழம்பை வெளியேற்றும் அனக் கிரகடாவ் எரிமலை
இந்தோனேசியாவின் அனக் கிரகடாவ் ((Anak Krakatau)) எரிமலை சீற்றத்துடன் குழம்பை வெளியேற்றி வருகிறது. ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு இடையே அமைந்துள்ள இந்த எரிமலை செப்டம்பர் 4 ம் தேதி நள்ளிரவில் தொடங்கிய வெடிப்பை தற்போது வரை தொடர்ந்து நீடித்து வருகிறது.

சுமார் 50 ஆயிரம் அடி உயரத்திற்கு சாம்பல் புகையும், நெருப்புக் குழம்புகளும் வான்நோக்கி எழும்பி வருவதால் விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. பான்டென் மாகாணத்தில் பள்ளிகள் மூடப்பட்டதோடு, மீன்பிடி பணிகளும் முடங்கின.
அவசரமாக தரையிறக்கப்பட்ட அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம்
நடுவானில் பயணி ஒருவர் வன்முறையில் ஈடுபட்டதால் டல்லாஸில் இருந்து நேவார்க் நோக்கி சென்ற அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம், பால்டிமோரில் அவசரமாக தரையிறக்கப்பட்டதோடு, அந்த பயணி போலீசாரிடம் ஒப்படைக்கப்படும் வரை விமான இருக்கையிலேயே பாலித்தீன் டேப்பால் கட்டி போடப்பட்டார்.

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென ஆக்ரோஷமடைந்து பணியாளர்களை நோக்கி கத்திய பயணி, அருகில் அமர்ந்திருந்த சக பயணி மீதும் தாக்குதல் நடத்தினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved