Also Watch
Read this
By: Manigandan Raja

ஈரான் போருக்கு பிறகு மத்திய கிழக்கில் பெரிய மாற்றம்
ஈரான் போருக்கு பிறகு மத்திய கிழக்கில் செயல்படுத்துவதற்காக ஒரு மிகப்பெரிய திட்டத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய கிழக்கில் உள்ள தனது நட்பு நாடுகளை மேலும் நெருக்கமாக ஒருங்கிணைப்பது, இஸ்ரேலை தனது அண்டை நாடுகளுடன் ஆழமான உறவுகளை வளர்த்துக்கொள்வதை ஊக்குவிப்பது உள்ளிட்டவற்றுடன் கூடிய மிகப்பெரிய செயல்திட்டத்தை, அமெரிக்க அரசின் உயர்மட்ட ஆலோசகர்கள், பலதுறை அதிகாரிகள் கூட்டாக உருவாக்கி வருவதாக Axios நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்தின் டோவர் துறைமுகத்தில் போராட்டம்
சட்டவிரோத குடியேற்றத்தை கண்டித்து இங்கிலாந்தின் டோவர் துறைமுகத்தில், எவ்வித முன்னறிவிப்புமின்றி போராட்டத்தில் ஈடுபட்ட முகமூடி அணிந்த நபர்கள், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இங்கிலாந்தில் சட்டவிரோதமாக குடியேறுவதற்காக வரும் புலம்பெயர்ந்த மக்களின் படகுகளை தடுத்து நிறுத்தக் கோரி போராட்டக்காரர்கள் முழக்கமிட்டனர்.
வங்கதேசத்தில் தட்டம்மை பரவல் தீவிரம்
வங்கதேசத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தட்டம்மை பரவல் அதிகரித்துள்ள நிலையில், தலைநகர் டாக்காவில் உள்ள மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.

நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோருக்கு தட்டம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், தற்போது வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved