Also Watch
Read this
By: Manigandan Raja

டெல்லியில் வரும் 11ஆம் தேதி பிரதமர் மோடி - புதின் பேச்சுவார்த்தை
தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் புதின் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 12 மற்றும் 13ஆம் தேதிகளில் டெல்லியில் நடைபெறவுள்ள 18வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் புதின் வருகை தரவுள்ள நிலையில், 11ஆம் தேதி பிரதமர் மோடி மற்றும் புதின் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
போபாலில் பயிற்சி மருத்துவர்கள் சாலை மறியல் போராட்டம்
மத்தியப் பிரதேசம் போபாலில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பயிற்சி மருத்துவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மாநில அரசு தங்களது உதவித்தொகையை உயர்த்துவது குறித்து எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.
கோரிக்கைகள் தொடர்பாக இதுவரை எந்த முடிவும் தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர்கள் கூறினர்.
முன்னாள் மாவட்ட ஆட்சியர் தேபாசிஷ் சர்மா பா.ஜ.க.வில் ஐக்கியம்
அசாம் மாநிலத்தில் முன்னாள் நாகான் மாவட்ட ஆட்சியர் தேபாசிஷ் சர்மா உள்ளிட்ட மூவர் பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர்.மூத்த பத்திரிகையாளர்கள் லெனின் சௌரவ் போரா, குஞ்சன் கலிதாவும் பாஜகவில் சேர்ந்துள்ளனர்.

நாகான் தொகுதி இடைத்தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், தேபாசிஷ் சர்மாவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved