Also Watch
Read this
By: Web Team

கடந்த 2024ம் ஆண்டு பிரம்மாண்டத்தின் உச்சமாக தயாராகி வெளியான திரைப்படம் கல்கி 2898 ஏடி.பிரபாஸ் தொடங்கி அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே, அன்னா பென், திஷா பதானி, கமல்ஹாசன், பசுபதி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். நாக் அஸ்வின் இயக்கத்தில் தயாரான இப்படத்தில், தீபிகா படுகோனே கதாபாத்திரத்தை சுற்றியே அதிகம் இருந்தது.
ஆனால் தற்போது தீபிகா படுகோனே கல்கி 2ம் பாகத்தில் இருந்து வெளியேறியது அனைவருக்கும் தெரிந்தது .அந்த வகையில் ,2ம் பாகத்தில் தீபிகாவின் கதாபாத்திரம் சுருக்கப்பட்டு கவுரவ வேடம் போல் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் குறைவான நேரம் பணி செய்ய விரும்புவது போன்ற காரணங்களால் தீபிகா படுகோனே வெளியேறியதால், தற்போது அவருக்கு பதில் யார் நடிப்பார் என பேச்சு வார்த்தை நடந்ததில் ஆலியா பட் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved