அரசன் படப்பிடிப்பு பணிகளில் தீவிரம் காட்டி வரும் இயக்குநர் வெற்றிமாறன், அடுத்ததாக இயக்க விரும்பும் திரைப்படத்திற்காக இரு பெரும் ஜாம்பவான்களிடம் கதை ஒன்றை கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கமல் ஹாசன் மற்றும் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியிடம் கதை கூறியுள்ளதாக சினிமா உலகில் பேசப்பட்டு வருகிறது.