மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பாலிவுட் இயக்குநர் ரோஹித் ஷெட்டியின் வீட்டின் மீது நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக போலீசார் 5 பேரை அதிரடியாக கைது செய்தனர். ஜீஹூ பகுதியில் உள்ள ரோஹித் ஷெட்டி தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பின் வெளிப்பகுதியில் இருந்து நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் கட்டடத்தை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதாக தெரிகிறது. அப்போது ரோஹித் ஷெட்டி வீட்டிற்குள் இருந்ததால் உயிர் பிழைத்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில், துப்பாக்கிச்சூடு தொடர்பாக அமன் ஆனந்த், ஆதித்யா ஞானேஷ்வர், சித்தார்த் தீபக், சமர்த் மற்றும் ஸ்வப்னில் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். Related Link "கிரீன்லாந்தை வாங்குவதற்கான ஒப்பந்தம் விரைவில் எட்டப்படும்"