Also Watch
Read this
By: Manigandan Raja

2 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது :
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே ஆண்டிமடம் செல்லும் வழிசாலையில் சாலை ஓரமாகவும் பள்ளியில் இருந்து 500 மீட்டர் அருகிலுமாக ஒரே கட்டிடத்தில் இரண்டு டாஸ்மாக் கடைகள் பல காலமாக இயங்கி வந்தன.
இந்நிலையில் இந்த டாஸ்மாக் கடையினால் சாலையில் அதிக விபத்துகளும், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள், குடியிருப்பு வாசிகள் என பலரும் வேதனைக்கு உள்ளாகி வந்தனர். இதனை அப்புறப்படுத்திட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் தமிழக அரசின் மாநிலம் முழுவதும் 700 க்கு மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டு வரும் நிலையில் அதில் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் ஒரே கட்டிடத்தில் இயஙகி வந்த இரண்டு டாஸ்மாக் கடைகள் அப்புறப்படுத்தப்பட்டன.
இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவர்களும் என பல தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். டாஸ்மாக் கடை அகற்றப்பட்டதால் தங்களுக்கு தற்போது ஆறுதலாக இருக்கிறது, மகிழ்ச்சியாகவும் இருக்கிறது எனவும் அவர்கள் அரசுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved