2ஆவது நாளாக ஆய்வு : மதுரையில் நடைபெறும் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகள் பங்கேற்பதற்காக பாரதப் பிரதமர் மோடி மார்ச் 1ஆம் தேதி மதியம் 2:45 மணிக்கு மதுரை விமான நிலையம் வருகிறார். மதுரை விமான நிலைய வளாகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியை முடித்துவிட்டு 3:55 மணிக்கு திருப்பரங்குன்றம் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். திருப்பரங்குன்றம் கோவிலுக்கு பிரதமர் வருகையொட்டி கோவில் நிர்வாகம் சார்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இரண்டாவது நாளாக பிரதமர் சிறப்பு பாதுகாப்பு குழுவினர் ஆய்வு செய்து கோவில் நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்து வருகின்றனர். Related Link படுகாயங்களுடன் ஜேசிபி ஓட்டுநரின் உடல் மீட்பு