Also Watch
Read this
By: Web Team

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள தேவாலய நிலத்தை விற்பனை செய்ய முயற்சி செய்து வருவதாக கூறி, முன்னாள் நிர்வாகிகளை கைது செய்யுமாறு பாதிரியார்கள் காவல் கண்காணிப்பாளர் அலுவலத்தில் மனு அளித்தனர்.
C.I.G.M கிறிஸ்தவ அமைப்பிற்கு சொந்தமான தேவாலயத்தை சுற்றி 3 கோடி ரூபாய் மதிப்பிலான இடம் உள்ளது.
இதனை தனி நபருக்கு விற்பனை செய்ய முன்னாள் நிர்வாகிகள் 26 லட்சம் ரூபாய் முன்பணம் பெற்று கையாடல் செய்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக பெஞ்சமின், தியாகராஜன் மற்றும் ஜெனிபர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என மனு அளித்தனர்.