Also Watch
Read this
By: Manigandan Raja

வலையில் சிக்கிய பெரிய புள்ளி சுறா மீன் :
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கொட்டில்பாடு மீனவ கிராமத்தில் மீனவர் வலையில் சிக்கி கரை ஒதுங்கிய சுமார் 5-டன் எடை கொண்ட ராட்சத திமிங்கல புள்ளி சுறா மீன் உயிரிழப்பு திமிங்கல புள்ளி சுறா மீனை காண பொதுமக்கள் குவிய தொடங்கியுள்ள நிலையில்.
கடல் நீரோட்டம் மற்றும் காலை நிலை மாறுபாடு காரணமாக கடலில் கரையோரமாக வரும் திமிங்கல புள்ளி சுறா மீன்கள் மீனவர்கள் வலையில் சிக்கி உயிரிழப்பதாக வனத்துறையினர் தகவல் கன்னியாகுமரி மாவட்டம் அரபிக்கடல் ஆழ்கடல் பகுதியில் ராட்சத திமிங்கல புள்ளி சுறா மீன்கள் அதிக அளவில் காணப்படுகிறது சமீப காலமாக ராட்சத திமிங்கல புள்ளி சுறா மீன்கள் அடிக்கடி கரை ஒதுங்கி வருகிறது.
இன்று குளச்சல் அருகே உள்ள கொட்டில்பாடு மீனவ கிராமத்தில் கடலில் மீனவர்களால் விரிக்கப்பட்ட வலையில் சிக்கி கொண்ட 2 ராட்சத திமிங்கல புள்ளி சுறா மீன்களில் ஒன்று தப்பி சென்ற நிலையில் சுமார் 5-டன் எடை கொண்ட மற்றொரு ராட்சத திமிங்கல புள்ளி சுறா மீன் வலையில் சிக்கி கரை ஒதுங்கி உயிரிழந்தது.
ராட்சத திமிங்கல புள்ளி சுறா மீன் கரை ஒதுங்கிய தகவலறிந்து கடற்கரையில் பொதுமக்கள் குவிய தொடங்கிய நிலையில் கடல் நீரோட்டம் மற்றும் காலை நிலை மாறுபாடு காரணமாக கடலில் கரையோரமாக வரும் திமிங்கல புள்ளி சுறா மீன்கள் மீனவர்கள் வலையில் சிக்கி கரை ஒதுங்கிமாவட்ட செய்திகள் உயிரிழப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved