Also Watch
Read this
Posted on: Nov 28, 2025 12:21 PM
By: Web Team

சென்னை பெருங்குடியில் உள்ள பிரபல தனியார் உணவகத்தில், துரைப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் பிரபு ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு காம்ப்ளிமெண்டாக உணவு வாங்குவதாக புகார் எழுந்துள்ளது. வாரம் ஒன்றுக்கு சுமார் 10 ஆயிரம் ரூபாய் என மாதந்தோறும் 40 ஆயிரம் ரூபாய் வரை ஓசியில் உணவு வாங்கி செல்வதால், கட்டுபடி ஆகவில்லை என ஓட்டல் நிர்வாகம் உணவு தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆய்வாளர் பிரபு, உணவகத்திற்கு வெளியே நோ பார்க்கிங் என போர்டு வைத்து வாகனங்களை நிறுத்த விடாமல் பிரச்சனை செய்ததால், அவர் ஓசியில் உணவு வாங்கியதற்கான பில்களை ஓட்டல் நிர்வாகம் சமூக ஊடகத்தில் பகிர்ந்ததாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved