Also Watch
Read this
Posted on: Mar 19, 2026 12:53 PM
By: Manigandan Raja

இயற்கை எரிவாயு வயல் மீது தாக்குதல் :
உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயலாகக் கருதப்படும் ஈரானின் சௌத் பார்ஸ் எரிவாயு வயல் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் எரிவாயு கிடங்கு மற்றும் சுத்திகரிப்பு நிலையம் சேதமடைந்துள்ளன. தாக்குதலை தொடர்ந்து, அப்பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
எனினும், இத்தாக்குதலில் இதுவரை எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி வசதிகள் தாக்கப்படுவது இதுவே முதல்முறை.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved