Also Watch
Read this
Posted on: Mar 19, 2026 12:49 PM
By: Manigandan Raja

தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு :
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள குடியிருப்பு பகுதியின் மீது இஸ்ரேல் நடத்திய திடீர் தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். குடியிருப்புகள் அதிகம் நிரம்பிய சுகாக் அல் பலாட் பகுதியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், 20-க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
அங்கு கைப்பற்றப்பட்ட உடல் பாகங்களின் மூலம் டிஎன்ஏ பரிசோதனைகள் செய்யப்பட்ட பிறகே கொல்லப்பட்டவர்களின் அடையாளங்கள் கண்டறியப்படும் என லெபனானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved