Also Watch
Read this
By: Manigandan Raja

பாலிஸ்டிக் ஏவுகணைகள் :
அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையை தயாரிக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க தேசிய உளவுத்துறை இயக்குநர் துளசி கபார்ட் கூறியுள்ளார். உளவுத்துறை கூட்டத்தில் பேசிய அவர், ரஷ்யா, சீனா, வட கொரியா, ஈரான், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்ட அணு உள்ளிட்ட பல்வேறு வகையான புதிய மற்றும் மேம்பட்ட ஏவுகணைகளை ஆராய்ச்சி செய்து உருவாக்கி வருவதாக கூறியுள்ளார்.
அதேபோல, அமெரிக்க ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை ஊடுருவிச் செல்லும் திறன் கொண்ட மேம்பட்ட ஏவுகணைகளை சீனாவும், ரஷ்யாவும் உருவாக்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved