Also Watch
Read this
By: Manigandan Raja

களத்தில் அதிக நேரம் வைத்திருக்க விரும்புகிறேன் :
ரோகித் சர்மாவை அதிக நேரம் களத்தில் வைத்திருக்கவே விரும்புவதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் ஜெயவர்தனே கூறியுள்ளார். 2025 ஐபிஎல் தொடரில் அவர் இம்பாக்ட் பிளேயர் விதியின் கீழ் பயன்படுத்தப்பட்டது கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட நிலையில், இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அதேசமயம், ரோகித் களத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அணியில் தொடர்ந்து மிகப்பெரிய தாக்கத்தை செலுத்திக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். மேலும், தற்போதைய தங்களது அணியில் ஆல் ரவுண்டர்களாக இல்லாதவர்கள் ரோகித் சர்மாவும், சூர்யகுமார் யாதவும் மட்டுமே என்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved