Also Watch
Read this
By: Web Team

இராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி அருள்மிகு பாலமுருகன் கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு, அறுகோண தெப்பக்குளத்தில் திரளான பக்தர்கள் கைகளில் விளக்குகளை ஏந்தி சிறப்பு வழிபாடு செய்தனர்.
உச்சி கணபதி மற்றும் ஸ்ரீ பாலமுருகன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து மலைக் கோவில் அடிவாரத்தில் உள்ள அறுகோண தெப்பக்குளத்தில், மலையிலிருந்து மங்கள மேளதாளம் முழங்க எழுந்தருளிய உற்சவருக்கு, மங்கல தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பக்தர்கள் அரோகரா.. அரோகரா.. என முழக்கமிட்டவாறு பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved