Also Watch
Read this

குழந்தை திருமணங்கள் :
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர், வாணியம்பாடி, நாட்றம்பள்ளி, திருப்பத்தூர் ஆகிய 4 தாலுக்கா முழுவதும் கடந்த 2025ம் ஆண்டில் நூற்றுக்கணக்கான குழந்தை திருமணங்கள் நடந்துள்ளது. அதில் காதல் திருமணங்கள் ஏராளமாக நடந்துள்ளதாக அதிகாரிகளின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதில் அதிக அளவில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ்அப் ஆகிய சமூக வலைதளங்களில் சிறு வயதில் ஒருவருக்கொருவர் செல் போனில் பேசுவதால் ஏற்பட்ட காதல் காரணமாக
திருப்பத்தூர் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான குழந்தை திருமணங்கள் நடந்துள்ளது. அதில் மாநிலம் விட்டு மாநிலம் கூட காதல் திருமணம் நடந்துள்ளது.
மாவட்ட நிர்வாகத்தால் பல திருமணங்கள் தடுத்து நிறுத்திய போதிலும் காதல் மற்றும் குழந்தை திருமணங்கள் நடந்துள்ளது. இதன் விளைவாக மாவட்டம் முழுவதும்
உள்ள அரசு மருத்துவமனைகளில் நாளுக்கு நாள் பருவ வயது பெண் பிள்ளைகள் கர்ப்பம் ஆகி பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அப்படி அனுமதிக்கும் பெற்றோர்கள் மற்றும் அவரது கணவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது அதிர்ச்சி தகவலாக உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாவட்ட ஆட்சியர் இனிமேல் குழந்தை திருமணங்கள் நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறுங்கள் என்று அதிகாரிகளிடம் அறிவுறுத்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved