Also Watch
Read this
By: Manigandan Raja

நேருக்கு நேர் மோதி விபத்து :
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த தேவபண்டலம் மணி ஆற்று ஆத்துப்பாலம் அருகே வீரபாண்டியன் மகன் சுமன் என்பவர் சங்கராபுரம் பகுதியில் இருந்து தேவபண்டலம் கிராமத்தை நோக்கி வந்ததாக கூறப்படுகிறது.
அப்பொழுது சிவபுரம் கிராமத்தைச் சேர்ந்த தெய்வீகன் மகன் கிருபாகரன் என்பவர் மது போதையில் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் வந்ததாக கூறப்படுகிறது, இந்த நிலையில் சுமன்
என்பவர் இருசக்கர வாகனத்தின் மீது கிருபாகரன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது இருவரும் கீழே விழுந்து பலத்த காயம் ஏற்பட்ட நிலையில்
அக்கம்பக்கத்தினர் மீட்டு சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர், அங்கு சுமன் என்பவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனைக் கண்ட சுமன் மைத்துனர் சதீஷ் என்பவர் துக்கம் தாங்க முடியாமல் மருத்துவமனையில் இருந்த கண்ணாடிகளை உடைத்து ரகளையில் ஈடுபட்டார் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved