Also Watch
Read this
By: Web Team

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே ஸ்ரீ பரஞ்சோதி அம்மன் ஆலயத்தில் ஆடி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.
மேள, வாத்தியங்கள் முழங்க வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பரஞ்சோதி அம்மன் ஊர்வலமாக சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved