Also Watch
Read this
By: Manigandan Raja

செயல்படாத அங்கன்வாடி மையம் :
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா சங்கரன்கோவில் பஞ்சாயத்து யூனியனுக்குட்பட்ட பெருமாள் பட்டி ஊராட்சி மாங்குடி கிராமத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது இம்மையத்திற்கு அருகில் மழைக்காலங்களில் மழை நீர் குளம் போல் தேங்குவதால் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை எனவும்.
அருகில் உயர் மின் அழுத்த கம்பி பாதை செல்வதாலும் பாதுகாப்பு கருதி அங்கன்வாடி மையம் கடந்த 3 ஆண்டுகளாக செயல்படவில்லை அதற்கு பதிலாக வாடகை கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருவதாகவும் பலமுறை மாவட்ட ஆட்சியரிடமும் ஊராட்சி அலுவகத்தில் கோரிக்கை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே அரசும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக தலையிட்டு உயர் மின்னழுத்த வழித்தடத்தை மாற்றியும் மழை காலத்தில் குளம் போல் தேங்கும் பகுதியையும் சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved