விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே செல்போன் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர் ஒருவர் சாவகாசமாக திருடிச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. 5 போன்கள் மற்றும் 35 ஆயிரம் ரூபாய் பணம் திருடு போனதாக உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.