Also Watch
Read this
By: Web Team

நாமக்கல் மாவட்டம் புதன் சந்தை பகுதியில் சோயா எண்ணெய் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி மீது மினி சரக்கு வேன் மோதிய விபத்தின் சிசிடிவி காட்சி வெளியானது.
தாராபுரத்தில் இருந்து மகாராஷ்டிராவிற்கு சுத்திகரிக்கப்படாத சோயா எண்ணெய்யை ஏற்றி சென்ற லாரி, நாமக்கல் மாவட்டம் புதன் சந்தை பகுதி வழியாக வந்த போது, அதன் மீது மினி சரக்கு வாகனம் மோதியது.
விபத்தில் லாரியில் இருந்து கசிந்த சோயா எண்ணெய்யை மக்கள் குடங்களில் பிடித்துச் சென்றனர். அந்த எண்ணெய்யை சமையலுக்கு பயன்படுத்த வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved