Also Watch
Read this
By: Web Team

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுகே புதிதாக கட்டிய பயணியர் நிழற்கூடத்தில் இரண்டாவது முறையாக சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சித்தூர்கேட் பகுதியில் 11 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பயணியர் நிழற்கூடத்தை கடந்த ஏப்ரல் மாதம் வேலூர் எம்.பி கதிர் ஆனந்த் திறந்து வைத்த நிலையில் இரண்டாவது நாளே சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்தன.
இதேபோல் பயணிகள் இல்லாத சமயத்தில் மீண்டும் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved