Also Watch
Read this
By: Web Team

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு புதூர் கிராமத்தில் முன்விரோதம் காரணமாக இருதரப்பு மீனவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கொருவர் உருட்டுக்கட்டை மற்றும் கம்புகளுடன் தாக்கிக் கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது.
மண்டைக்காடு புதூர் கிராமத்தை சேர்ந்த சகாய ஷெர்லின் ஆன்றணி என்பவருக்கும் டினோ என்பவருக்கும் இடையே மதுபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இருந்த முன்விரோதம் இருதரப்பு மோதலாக மாறியது.
இந்த தாக்குதலில் மண்டை உடைந்து ஏழு பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் இருதரப்பை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved