Also Watch
Read this
By: Web Team

திருப்பூரில் முறையாக ஊதியம் வழங்காத தனியார் ஒப்பந்த நிறுவனத்தை கண்டித்து மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 3 ஆவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாநகரில் குப்பைகள் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மொத்தமுள்ள 60 வார்டுகளில் தினசரி சேரும் 700 டன் குப்பைகளை அகற்ற எஸ்.டபிள்யூ.எம்.எஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் மூலம் ஏராளமான தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வரும் நிலையில் இவர்களில் பலருக்கு முறையான ஊதியம் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் தீபாவளிக்கான போனஸ் கோரிக்கைகளை வலியுறுத்தியும் வேலை நிறுத்த போராட்டம் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படியுங்கள் : கல்லுக்கூட்டம் தேவாலயத்தில் புதிய கட்டுமானப் பணிகள்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved