கயத்தாறில் சமுதாய நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் மூலம் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியை குழந்தைகள் திட்ட வளர்ச்சி அலுவலர் சண்முகப்பிரியா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.கர்ப்பிணிகளுக்கு பரிமாறப்பட்ட 11 வகையான உணவுகள் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்ச்யில் சுற்றுவட்டாரத்திலிருந்து 100க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் கலந்து கொண்ட நிலையில் அவர்களுக்கு சேலை, வளையல், மஞ்சள் கயிறு அடங்கிய சீதன பொருட்கள் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து தலை வாழை இலையில் கர்ப்பிணிகளுக்கு 11 வகையான உணவுகள் பரிமாறப்பட்டது. Related Link அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்