Also Watch
Read this
By: Web Team

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சித்தேரி ரயில் நிலையம் அருகே, ரயில் தண்டவாளத்தில் உடைப்பு ஏற்பட்டதால், அவ்வழியே ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அரக்கோணத்தில் இருந்து காட்பாடி வரை செல்லும் 9 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில், சித்தேரி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் 3-ஆவது பெட்டி தண்டவாளத்தில் இருந்து இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, ரயிலை நிறுத்திய அதன் ஓட்டுநர், தண்டவாளம் உடைந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதன் காரணமாக, காட்பாடி செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன.
தகவலறிந்து வந்த ரயில்வே ஊழியர்கள், தண்டவாள உடைப்பை சரி செய்த பின்னர், அவ்வழியாக ரயில்கள் புறப்பட்டுச் சென்றன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved