Also Watch
Read this
By: Web Team

கடலூர் மாவட்டம் விளாங்காட்டூர் நடுநிலைப் பள்ளியை உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்த கோரி மாணவர்கள் அரையாண்டு தேர்வை புறக்கணித்த நிலையில் பெற்றோர்கள் பள்ளி முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேச்சுவார்த்தைக்கு வந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் பெற்றோர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பள்ளி மேலாண்மை குழுவில் பள்ளியை உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்த தீர்மானம் நிறைவேற்றிய பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி நடந்த இந்த போராட்டத்தில் மாணவர்களை தேர்வை புறக்கணித்ததால் பள்ளி வளாகம் வெறிச்சோடியது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved