Also Watch
Read this
By: Manigandan Raja

தள்ளிவிட்டு உள்ளே சென்ற பக்தர்கள் :
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு திருநெல்வேலி தென்காசி, கன்னியாகுமரி ராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாதயாத்திரையாக வந்து வேண்டுதலை நிறைவேற்றுவது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் பரமக்குடியைச் சேர்ந்த பக்தர்கள் 500க்கும் மேற்பட்டோர் பாதயாத்திரை ஆக திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் பால்குடம் எடுத்தும் காவடி சுமந்தும் அழகுவேல் குத்தியும் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற கோவிலுக்கு வந்தனர்.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் பாதயாத்திரை பக்தர்களுக்கு தனி வரிசை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் இன்று தனி வரிசை அமைக்காததால், சுமார் ஒரு மணி நேரமாக நேரமாக சண்முக விலாச மண்டபம் முன்பு காத்து நின்றனர்.
ஆனால் கோவில் நிர்வாகம் தனி வரிசை ஏற்படுத்திக் கொடுக்காததால் ஆத்திரமடைந்த பக்தர்கள் சண்முக விலாசம் மண்டபம் முன்பு உள்ள கேட்டை தள்ளிவிட்டு உள்ளே சென்றதால் நெரிசல் ஏற்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved