Also Watch
Read this
By: Web Team

சென்னை எழும்பூர் அருகே, மின்சார ரயில் வழித்தடத்தில் உயரழுத்த மின்கம்பத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக, புறநகர் மின்சார ரயில் சேவை ஒரு மணி நேரமாக பாதிக்கப்பட்டது.
தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணி நடந்ததால், சென்னை எழும்பூர் - தாம்பரம் இடையிலான வழித்தடத்தில் இரு மார்க்கத்திலும் கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக புறநகர் ரயில் சேவை முடங்கியது.
கடந்த வாரம் வியாசர்பாடி அருகே, இதேபோன்ற பிரச்னை ஏற்பட்டதால், சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் வழித்தடத்தில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved