Also Watch
Read this
By: Manigandan Raja

விவசாயிகள் கடும் வாக்குவாதம் :
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்த வலையப்பட்டி செல்லாண்டியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது இந்த கோவில் ஆனது இந்து சமய அறநிலை கட்டுப்பாட்டில் செயல்பட்டு
வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி உட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பதற்காக மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி அவருடைய மகள் பூமலர் போட்டியிடும் நிலையில் சுற்று வட்டார பகுதிகளில் பிரச்சார மேற்கொள்வதற்காக செல்லாண்டி அம்மன் திருக்கோவில் வளாகத்தில் கூட்டம் கூடி இருந்தன.
திமுக நடத்திய கூட்டத்தில் அப்பகுதியில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் சிப்காட் எதிர்ப்பு இயக்கத்தினர் தங்களுடைய கடும் போராட்டத்தை குறித்து விளக்கிக் கூறியும் அதற்கு ஒரு முடிவு கூறுமாறு கூறிய நிலையில் திமுக நிர்வாகிகளுக்கும் விவசாயிகளுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் மோகனூர் ஒன்றிய கழக செயலாளர் நவலடி அரசுக்கு சொந்தமான கோவிலில் உள்ள இடத்தில் நாங்கள் நடத்துகிறோம் நீங்கள் எதுக்கு உள்ள வரீங்க நாங்கள் உங்களை குப்பிட்டோமா வெளியே போங்க என பேச்சு.
இந்து சமய அறநிலைய துறை கட்டுபாட்டில் உள்ள கோவில்களில் கட்சி சம்பந்தமான கூட்டங்கள் எதுவும் நடத்தக்கூடாது என்றும் சொல்லப்படுகிறது. தொடர்ந்து இங்கு நடந்த சம்பவத்தை குறித்து நாமக்கல் தேர்தல் அலுவலர் வருவாய் கோட்டாட்சியர் சாந்தி என்பவரிடம் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க இருந்த நிலையில்.
அவர் முற்றிலும் தொடர்பை எடுப்பதில்லை விவசாயிகள் கடும் குற்றச்சாட்டை முன்வைக்கின்றன இதனால் சிப்காட் எதிர்ப்பு இயக்கத்தில் இருக்கும் விவசாயிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அங்கு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved