Also Watch
Read this
By: Web Team

மேகதாது விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசைக் கண்டித்து, தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் சோழன் விரைவு ரயிலை
மறித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் பொதுச் செயலாளர் பழனியப்பன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு மேகதாதுவில் அணை கட்ட துடிக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். இதனால் சோழன் விரைவு ரயில் 15 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved