Also Watch
Read this
By: Web Team

சிவகங்கை அருகே குடும்ப பிரச்சனையில் தனது பத்து மாத பெண் குழந்தைக்கு பூச்சி மருந்து கொடுத்து விட்டு தந்தையும் அதனை குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், குழந்தை மட்டும் பரிதாபமாக உயிரிழந்தது.
பாப்பாகுடி பகுதியை சேர்ந்த விவசாயி பம்பையன், தனது மனைவியிடம் இருந்து குழந்தையை தனியாக தூக்கி சென்று பூச்சி மருந்து கொடுத்து விட்டு, அவரும் குடித்தார். இதையறிந்த உறவினர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved