Also Watch
Read this
By: Web Team

தேனி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் பெய்யும் தொடர் கன மழை காரணமாக சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு தொடர்வதால், சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை மூன்றாவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
மரம், கற்கள், செடி கொடிகளுடன் அடித்துக் கொண்டு வந்து, தடுப்புகளை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் நிலையில், படிக்கட்டுகளிலும் வெள்ளம் செல்வதால் சுற்றுலா பயணிகள் அருவிப் பகுதிக்கு செல்ல வேண்டாம் என வனத்துறை எச்சரித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved