Also Watch
Read this
By: Web Team

தேனி மாவட்டம் சீலையம்பட்டி முல்லைப் பெரியாற்றில் தடுப்பணைகளை தாண்டி வெள்ளம் ஆர்ப்பரித்து செல்வதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் மழையால் முல்லைப் பெரியாறு அணையின்நீர்மட்டம் உயர்ந்து வருவதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 1867 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனுடன் சுருளி ஆற்று தண்ணீரும் சுரங்கனார் அருவி நீரும் முல்லைப் பெரியாற்றில் கலந்து வைகையை நோக்கி செல்வதால் பொதுமக்கள் தடுப்பணைகளில் இறங்கி செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.