Also Watch
Read this
By: Web Team

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கொண்டம்பட்டியில் இயங்கி வரும் தனியார் தென்னை நார் தொழிற்சாலையில் இருந்து பறக்கும் துகள்களால், சுற்றியுள்ள பகுதியில் வசித்து வரும் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
காற்றின் வேகத்தால் தென்னை நார் துகள்கள் அருகிலுள்ள வீடுகளில் உள்ள பொருட்கள் மீது படிவதோடு, குடிநீர் மாசடைவதாகவும்,
சிலருக்கு மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக முதலமைச்சர் தனிப்பிரிவு வரை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறும் அப்பகுதி மக்கள்,
வரும் 23ஆம் தேதி தங்கள் பகுதி வழியாக உடுமலைக்கு செல்லும் முதலமைச்சருக்கு கருப்பு கொடி காட்ட இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved