Also Watch
Read this
By: Manigandan Raja

பனிமூட்டம் :
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில நாட்களாகவே மிதமான மழை பெய்து வருகிறது. மேலும் மழைக்கு பிறகு அவ்வபோது ஆங்காங்கே பனி மூட்டமானது படர்ந்து
காணப்பட்டு வரும் நிலையில் இன்று காலை முதலே மந்தமான வானிலையாக காணப்பட்டது.
இந்த நிலையில் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை வேளையில் திடீரென அடர்ந்த பனிமூட்டம் தரையிறங்கி காணப்படுவது மட்டுமல்லாமல் பசுமையான மலைமுகடுகளில் பனிமூட்டமானது படர்ந்து காணப்படுகிறது.
இந்த ரம்யமான காட்சியை சுற்றுலா பயணிகள் வருவதுடன் கண்டு ரசித்து வருகிறார்கள். மேலும் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வபோது பெய்து
வரும் இந்த மழையால் குளிர்ந்த காலநிலை காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.