Also Watch
Read this
By: Web Team

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே அரசுப் பேருந்தும், சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
புதுச்சேரியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற சரக்கு வாகனமும், திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த அரசு பேருந்தும் அடுக்கம் பகுதியில், சாலை வளைவில் விபத்தில் சிக்கின.
இரண்டு வாகனங்களின் முன்பகுதியும் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில், சரக்கு வாகன ஓட்டுநர் முருகானந்தத்தின் சடலம் மீட்கப்பட்டது.
சரக்கு வாகன ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் இருந்ததால், விபத்து ஏற்பட்டது என போலீசார் தெரிவித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved