Also Watch
Read this
By: Web Team

குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுகள் செப்டம்பர் 28 ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
சார்பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வனவர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான 645 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது.
ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை தேர்வாணைய இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும், தேவைக்கேற்ப காலிப் பணியிடங்கள் மேலும் அதிகரிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved