Also Watch
Read this
By: Web Team

சென்னை புறநகர் பகுதியில் பெய்த கனமழையால் ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள துரைப்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் மழைநீர் குளம் போல் தேங்கியது. இதனால் பேருந்து நிலையத்தில் காத்திருந்த பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துடன் மழைநீரில் தத்தளித்தவாறு சென்றனர். ஓஎம்ஆர் சாலையில் தரமணி, பெருங்குடி, துரைப்பாக்கம், கண்ணகி நகர், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலும், இ.சி.ஆர் சாலையில் திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, உத்தண்டி உள்ளிட்ட பகுதிகளிலும், பள்ளிக்கரணை, மேடவாக்கம், சித்தாலப்பாக்கம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கியது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved