Also Watch
Read this
By: Web Team

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பெய்த கனமழையால் சுமார் ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி சேதமடைவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். கொக்கலாடி, ஆத்தி கோட்டகம், அரக்கரை, மாமணி, அத்திமடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 30 முதல் 40 நாட்கள் ஆன இளம் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் மழைநீரில் மூழ்கின. ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை செலவு செலவு செய்ததாக வேதனை தெரிவித்த விவசாயிகள் சேதமடைந்த பயிர்களை அதிகாரிகள் கணக்கெடுப்பு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved