Also Watch
Read this
By: Web Team

திருவாரூர் மாவட்டத்தில் 3 நாட்களாக பெய்த கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த 5 ஆயிரம் ஏக்கர் நெல் பயிர்கள் வயலில் சாய்ந்தன. ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ள நிலையில் அறுவடை நேரத்தில் பெய்த மழையால் பயிர்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம், வேளாண் துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved