இடிக்கப்பட உள்ள வீடுகள் : தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே அமைந்துள்ளது அனுமந்தன்பட்டி பேரூராட்சி இந்த பேரூராட்சியில் கிழக்குத் தெரு ஆர் சி கிறிஸ்தவ பட்டியலின சமுதாயங்கள் வசித்து வரக்கூடிய பகுதியில் நான்கு வழி சாலை வருவதாகவும் அதனால் வீடுகளை இடிக்கப் போவதாகவும் தேசிய நெடுஞ்சாலை துறையின் அறிவித்துள்ளன.இதனால் கலக்கமடைந்த பொதுமக்கள் தங்களது வீடுகளை இடித்து விட்டால் எங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் பிள்ளை குட்டியோடு தெரிவது தன் நிற்போம் மூன்று தலைமுறையாக இந்த பகுதியில் வசித்து வருகின்றோம், குறிப்பாக இந்த பதிவில் நாங்கள் மட்டுமே இருந்து வருகிறோம் எங்களது வீடுகளை இடித்தால் நாங்கள் எங்கு செல்வோம் எங்களுக்கு மாற்று இடத்தை வழங்கிவிட்டு வீடுகளை இடிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் தமிழக முதல்வருக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு தங்களுக்கு வீடுகளையும் இடங்களையும் ஒதுக்கவில்லை என்றால் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலை புறக்கணிப்போம் என்றும் அனாதையாக இருந்து வரும் எங்களுக்கு யார் உதவுவார் என்றும் கவலையுடன் நியூஸ் தமிழுக்கு பேட்டி அளித்துள்ளனர். இடுகுறித்து அந்தப் பகுதியில் வாழ்ந்து வரும் வைஜெயந்தி என்ற இளம் பெண் கூறுகையில் நான் எனது அம்மா அப்பா இருவரும் இறந்து விட்டார்கள் நான் மட்டும் இருந்து வருகிறேன் எனது வீட்டை இடித்து விட்டால் எனக்கு எங்கு சென்று வாழ்வேன் என்று தன்னது ஆதங்கத்தை நம்முடன் பகிர்ந்து உள்ளார். இதுகுறித்து வயதான மூதாட்டி மேரி கூறுகையில் நான் வயதான எனது கணவருடன் இருந்து வருகிறேன் வீடை இடித்து விட்டால் நான் இங்கு குடியிருப்போம் எங்களுக்கு யார் உதவுவார் எங்களுக்கு மாற்று இடம் தர வேண்டும் இல்லை என்றால் தேர்தலை புறக்கணிப்போம் யாரும் வந்தாலும் புறக்கணிப்போம் நாங்கள் இறந்து விடுவோம் என்று கூறுகிறார். இதுகுறித்து அந்தப் பகுதியில் வசித்து வரும் பெண்மணி கூறுகையில் எங்களுக்கு மாற்று இடம் தந்துவிட்டு எங்களது வீடுகளை காலி செய்யுங்கள் இல்லை என்றால் நாங்கள் இங்கேதான் வாழ்வோம் எங்களுக்கு வேறு இடம் இலலை மாவட்ட ஆட்சித் தலைவர் தமிழக முதல்வர் எங்களுக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.இல்லையென்றால் வரக்கூடிய சட்டமன்ற தேர்தலை புறக்கணித்து தங்களது வாழ்வாதார பாதிக்கப்படுவது கேள்விக்குறியாகியுளளது என்று குறிப்பிட்டு எழுதி உள்ளனர். பேட்டி. அந்தப் பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள். Related Link பல்லடம் அருகே லாரி மீது நேருக்கு நேர் மோதிய கார்