சேலம் மாவட்டம் ஏற்காட்டில் அதிகாலை நேரத்தில் மலைப்பாதையில் ஆங்காங்கே மேகக்கூட்டங்கள் தரையிறங்கியது போன்று ரம்மியமாக காட்சியளித்தது. இதனால் இதமான சூழல் நிலவிய நிலையில் மகிழ்ச்சி அடைந்த சுற்றுலா பயணிகள் படகு இல்லம், ஏரி பூங்கா, அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று இயற்கையை ரசித்து வருகின்றனர். சாலை தெரியாத அளவிற்கு பனிமூட்டமாக இருந்ததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றனர்.