Also Watch
Read this
By: Web Team

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. சென்னை மாநகராட்சியின் கீழ் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 417 பள்ளிகள் இயங்கி வரும் நிலையில், அவற்றில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் 2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை அதிகரிக்க சிறப்பு கவனம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதன் பயனாக இந்த ஆண்டு 16 ஆயிரத்து 419 மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved