முத்துக்கடை பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 4-வது நாளாக கொட்டி தீர்க்கும் பனியையுச் பொருட்படுத்தாமல் சாலையிலேயே படுத்து உறங்கி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக முழுவதிலும் உள்ள சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், அனைத்து அரசுத்துறை காலிப்பணியிடங்களில் சத்துணவு ஊழியர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும், ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கும் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் கிராமஉதவியாளர்களுக்கு வழங்குவது போல் அகவிலைப்படியுடன் ஓய்வூதியமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக 4-வது சத்துணவு அங்கன்வாடி பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். Related Link இங்கு யாரும் அனாதை இல்லை