Also Watch
Read this
By: Manigandan Raja

வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட இருவர் கைது :
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திக் என்பவர் அதே
பகுதியிலுள்ள டீகடை உரிமையாளர் மணிமேகலை மற்றும் செந்தில்குமார் ஆகியோர்களிடம் அவர்களது டீ கடைக்கு பில்டிங் கட்டுவதற்கு.
அனுமதி வழங்க 20 ஆயிரம் லஞ்சம் கேட்டு பிறகு பேரம் பேசி 13 ஆயிரம் லஞ்சமாக தனியார் சிவில் என்ஜினியர் தீபக் என்பவரிடம் லஞ்சப் பணம் கொடுக்கும்படி கூறியதையடுத்து மணிமேகலை மற்றும் செந்தில்குமார் ஆகியோர் சேலம் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகாரளித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் ரவிகுமார் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மணிமேகலையிடம் ரசாயணம் தடவிய பணம் 13 ஆயிரத்தை
கொடுத்து மகுடஞ்சாவடி ஊராட்சி அலுவலகத்திற்குள் சென்று.
தனியார் சிவில் என்ஜினியர் தீபக்கிடம் கொடுத்த போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து தீபக் மற்றும் Bdo கார்த்திக் ஆகிய இருவரையும் கைது
செய்து தொடர்ந்து 4 மணி நேரத்திற்கும் மேலாக தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனால் மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved