Also Watch
Read this
By: Manigandan Raja

மினி பேருந்து கவிழ்ந்து விபத்து :
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள கொத்தனூரில் இருந்து மாளிகை மேடு வழியாக 10 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச்சென்ற மினி பேருந்து ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்த விபத்துக்குள்ளானது
விபத்தில் பா. கொத்தனுர் சேர்ந்த கருப்பாயி என்ற (70)வயது மூதாட்டி சம்பவ இடத்திலேயே உடல் நசையை பரிதாபமாக உயிரிழந்துள்ளார் மேலும் பேருந்தில் பயணம் செய்த பத்திற்கு மேற்பட்ட நபர்களை அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலமாக வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் குறுகிய சாலையில் மினி பேருந்துக்கு எதிரே வந்த அரசு பேருந்துக்கு வழி விட்டபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved