Also Watch
Read this
By: Manigandan Raja

சிலிண்டர் மற்றும் கற்களை வைத்து மக்கள் மறியல் :
உதகை குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்று வரும் போராட்டத்தால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு. அமெரிக்க இஸ்ரேல் ஈரான் போரின் காரணமாக எரிவாயு தட்டுப்பாடு காணப்படுகிறது. தொடர்ந்து வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர்கள் கிடைப்பதில் சிக்கல்கள் எழுந்துள்ளது.
ஒருமுறை பதிவு செய்து 40 நாட்களுக்கு மேலாகியும் தங்களுக்கு இதுவரை சமையல் எரிவாயு கிடைக்கவில்லை எனக் கூறி உதகை குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலையின் குறுக்கே சிலிண்டர் மற்றும் கற்களை அடுக்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதன் காரணமாக உலகை குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வரும் இந்த மறியல் காரணமாக சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved